Wednesday 4 September 2013
Tuesday 3 September 2013
Saturday 31 August 2013
Thursday 29 August 2013
Monday 26 August 2013
இதை தான் காதல் என்று சொல்வார்களோ ?
அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
எத்தனை முறை
பார்த்தாலும்
சலிக்கவில்லை !
கன்னக்குழியில்
காணாமல்
போனேனோ ?
வண்ணமில்லா வானவில்
மீசைக்குள் மறைந்து தான்
போனேனோ ?
மனம் மட்டும்
எப்போதும் மயக்க நிலையில் !
அழகன் இல்லை
எத்தனை முறை
பார்த்தாலும்
சலிக்கவில்லை !
கன்னக்குழியில்
காணாமல்
போனேனோ ?
வண்ணமில்லா வானவில்
மீசைக்குள் மறைந்து தான்
போனேனோ ?
மனம் மட்டும்
எப்போதும் மயக்க நிலையில் !
Sunday 25 August 2013
அழகாய் கலையும்
தலைமுடியும்
அதை கோதிவிடும்
விரல்களும்
சாய்த்துவிடும் கண்களும்
சந்துப்பல் சிரிப்பும்
மூக்கின்மேல் முத்தமிடும்
முத்தான மச்சமும் !
மார்பின் மத்தியில்
பூத்திருக்கும் வேர்வைபூக்களும் !
மோக முனகலும்
முத்த தீர்த்தமும் !
உன் பிரியம் சொல்ல
பெரிதாய் இல்லை
வார்த்தைகள் !
உன் பிரியம் சொல்ல
பெரிதாய் இல்லை
வார்த்தைகள் !
வானம் விரித்து
சூரியனைத் தொட்டு
எழுதினாலும்
போதாதே பக்கங்கள்
உன்னை பற்றி எழுதிட !
பஞ்சுமெத்தையில் படுத்தாலும்
பக்கம் நீ இல்லையென்றால்
உறக்கம் கூட இரக்கம்
காட்டுவதில்லை !
காதலுடன் காத்திருக்கிறேன்
கண்ணாளனே
உன் வரவிற்காக !
Friday 23 August 2013
Thursday 1 August 2013
பரவசமாய் பரிதவிப்பாய்
நான் நட்டு வைத்த
செடியில்
பூ பூத்தது போல !
புதியதாய் மூக்குத்தி
குத்திக் கொள்ளும்
கன்னிப்பெண் போல !
நீ என்னை கடந்து
செல்கையில்
பரவசமாய் பரிதவிப்பாய்
செடியில்
பூ பூத்தது போல !
புதியதாய் மூக்குத்தி
குத்திக் கொள்ளும்
கன்னிப்பெண் போல !
நீ என்னை கடந்து
செல்கையில்
பரவசமாய் பரிதவிப்பாய்
Wednesday 17 July 2013
Saturday 22 June 2013
குப்பைத்தொட்டிக் குழந்தை
முட்டிக் கொண்ட முத்தத்தில்
எட்டி பார்த்த மழலை நான் !
கட்டிக்கொண்டு இருந்ததால்
கருவில் முளைத்த சிலை நான்!
உன்னை கருவில் உதைத்ததாளோ
என்னை உதறி தள்ளிவிட்டாயோ !
கருவில் என்னை சுமந்த தாயே
கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !
குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !
பார்த்துச் செல்வோரெல்லாம்
பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !
என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !
இப்படியே அலறித் துடித்தால்
இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !
இருள்சூழ்கிறது தாயே
இப்போதே வந்துவிடு !
எட்டி பார்த்த மழலை நான் !
கட்டிக்கொண்டு இருந்ததால்
கருவில் முளைத்த சிலை நான்!
உன்னை கருவில் உதைத்ததாளோ
என்னை உதறி தள்ளிவிட்டாயோ !
கருவில் என்னை சுமந்த தாயே
கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !
குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !
பார்த்துச் செல்வோரெல்லாம்
பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !
என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !
இப்படியே அலறித் துடித்தால்
இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !
இருள்சூழ்கிறது தாயே
இப்போதே வந்துவிடு !
Monday 17 June 2013
Sunday 16 June 2013
நீ இல்லாத நான்
உன் இல்லாள்
நீ இல்லாமல் தனியாள் !
பெரு நகரத்தில் வசிக்கிறேன்
நீ இல்லாமல்
பெரும் நரகத்தில் வசிக்கிறேன் !
குழந்தைபோல் எழுந்தவுடன்
வருவாய் என்னை தேடி
உறங்கும்போது முத்தமிடுவாய்
தாயாய் மாறி
ஒரு நாளும் சண்டையுடன்
உறங்கியதில்லை
இப்போதெல்லாம்
ஒருநாள்கூட உன் சட்டை
இல்லாமல் உறங்குவதில்லை
கிரிக்கெட்டை ஒளிக்கவிட்டு
சமைக்கிறேன் உள்ளிருந்து
நிலாச்சோற்றை நம்பும் பிள்ளைபோல்
நீ இருக்கிறாய் என்று !
விஜயம் செய்ய முடியாததால்
வீடியோவில் வருகிறாயா?
உன்னை காணமுடிகிறதேன்று
தொழில்நுட்பத்தை போற்றுவதா ?
அயல்நாடு அனுப்பிய
தொழில்நுட்பத்தை சாடுவதா ?
கடிகாரம்கூட சுற்றுகிறது
இறுகிய நிலையில்
கனவுகளோடும் கணினியோடும்
கரைகிறது என் நாட்கள் !
விட்டுச் சென்ற உன் வாசனை திரவியம்
அதுவும் தரவில்லை உன் வாசம் !
கழட்டிபோட்ட உன் சட்டை
படித்து பாதி மடித்த செய்தித்தாள்
அழகான நம் இல்லம்
இப்போது அருங்காட்சியகமாய் !!!!!
Saturday 15 June 2013
Monday 10 June 2013
Sunday 9 June 2013
Subscribe to:
Posts (Atom)