Saturday 31 August 2013
Thursday 29 August 2013
Monday 26 August 2013
இதை தான் காதல் என்று சொல்வார்களோ ?
அப்படி ஒன்றும்
அழகன் இல்லை
எத்தனை முறை
பார்த்தாலும்
சலிக்கவில்லை !
கன்னக்குழியில்
காணாமல்
போனேனோ ?
வண்ணமில்லா வானவில்
மீசைக்குள் மறைந்து தான்
போனேனோ ?
மனம் மட்டும்
எப்போதும் மயக்க நிலையில் !
அழகன் இல்லை
எத்தனை முறை
பார்த்தாலும்
சலிக்கவில்லை !
கன்னக்குழியில்
காணாமல்
போனேனோ ?
வண்ணமில்லா வானவில்
மீசைக்குள் மறைந்து தான்
போனேனோ ?
மனம் மட்டும்
எப்போதும் மயக்க நிலையில் !
Sunday 25 August 2013
அழகாய் கலையும்
தலைமுடியும்
அதை கோதிவிடும்
விரல்களும்
சாய்த்துவிடும் கண்களும்
சந்துப்பல் சிரிப்பும்
மூக்கின்மேல் முத்தமிடும்
முத்தான மச்சமும் !
மார்பின் மத்தியில்
பூத்திருக்கும் வேர்வைபூக்களும் !
மோக முனகலும்
முத்த தீர்த்தமும் !
உன் பிரியம் சொல்ல
பெரிதாய் இல்லை
வார்த்தைகள் !
உன் பிரியம் சொல்ல
பெரிதாய் இல்லை
வார்த்தைகள் !
வானம் விரித்து
சூரியனைத் தொட்டு
எழுதினாலும்
போதாதே பக்கங்கள்
உன்னை பற்றி எழுதிட !
பஞ்சுமெத்தையில் படுத்தாலும்
பக்கம் நீ இல்லையென்றால்
உறக்கம் கூட இரக்கம்
காட்டுவதில்லை !
காதலுடன் காத்திருக்கிறேன்
கண்ணாளனே
உன் வரவிற்காக !
Friday 23 August 2013
Thursday 1 August 2013
பரவசமாய் பரிதவிப்பாய்
நான் நட்டு வைத்த
செடியில்
பூ பூத்தது போல !
புதியதாய் மூக்குத்தி
குத்திக் கொள்ளும்
கன்னிப்பெண் போல !
நீ என்னை கடந்து
செல்கையில்
பரவசமாய் பரிதவிப்பாய்
செடியில்
பூ பூத்தது போல !
புதியதாய் மூக்குத்தி
குத்திக் கொள்ளும்
கன்னிப்பெண் போல !
நீ என்னை கடந்து
செல்கையில்
பரவசமாய் பரிதவிப்பாய்
Subscribe to:
Posts (Atom)