நீ இல்லாத நான்
உன் இல்லாள்
நீ இல்லாமல் தனியாள் !
பெரு நகரத்தில் வசிக்கிறேன்
நீ இல்லாமல்
பெரும் நரகத்தில் வசிக்கிறேன் !
குழந்தைபோல் எழுந்தவுடன்
வருவாய் என்னை தேடி
உறங்கும்போது முத்தமிடுவாய்
தாயாய் மாறி
ஒரு நாளும் சண்டையுடன்
உறங்கியதில்லை
இப்போதெல்லாம்
ஒருநாள்கூட உன் சட்டை
இல்லாமல் உறங்குவதில்லை
கிரிக்கெட்டை ஒளிக்கவிட்டு
சமைக்கிறேன் உள்ளிருந்து
நிலாச்சோற்றை நம்பும் பிள்ளைபோல்
நீ இருக்கிறாய் என்று !
விஜயம் செய்ய முடியாததால்
வீடியோவில் வருகிறாயா?
உன்னை காணமுடிகிறதேன்று
தொழில்நுட்பத்தை போற்றுவதா ?
அயல்நாடு அனுப்பிய
தொழில்நுட்பத்தை சாடுவதா ?
கடிகாரம்கூட சுற்றுகிறது
இறுகிய நிலையில்
கனவுகளோடும் கணினியோடும்
கரைகிறது என் நாட்கள் !
விட்டுச் சென்ற உன் வாசனை திரவியம்
அதுவும் தரவில்லை உன் வாசம் !
கழட்டிபோட்ட உன் சட்டை
படித்து பாதி மடித்த செய்தித்தாள்
அழகான நம் இல்லம்
இப்போது அருங்காட்சியகமாய் !!!!!
No comments:
Post a Comment