Sunday, 16 June 2013

நீ இல்லாத நான்

உன் இல்லாள்

 நீ இல்லாமல் தனியாள் !


பெரு நகரத்தில் வசிக்கிறேன்

 நீ இல்லாமல்

பெரும் நரகத்தில் வசிக்கிறேன் !


குழந்தைபோல் எழுந்தவுடன் 

வருவாய் என்னை தேடி 

உறங்கும்போது முத்தமிடுவாய் 

தாயாய்        மாறி 


ஒரு நாளும் சண்டையுடன்

உறங்கியதில்லை  

இப்போதெல்லாம்

ஒருநாள்கூட உன் சட்டை 

இல்லாமல் உறங்குவதில்லை 


கிரிக்கெட்டை ஒளிக்கவிட்டு

சமைக்கிறேன் உள்ளிருந்து 

நிலாச்சோற்றை நம்பும் பிள்ளைபோல்

 நீ இருக்கிறாய் என்று !


விஜயம் செய்ய முடியாததால் 

வீடியோவில் வருகிறாயா? 

உன்னை காணமுடிகிறதேன்று

தொழில்நுட்பத்தை போற்றுவதா ? 

அயல்நாடு அனுப்பிய 

தொழில்நுட்பத்தை சாடுவதா ? 


 கடிகாரம்கூட சுற்றுகிறது 

இறுகிய நிலையில்

 கனவுகளோடும் கணினியோடும் 

கரைகிறது என் நாட்கள் ! 


விட்டுச் சென்ற உன் வாசனை திரவியம் 

அதுவும் தரவில்லை உன் வாசம் ! 


கழட்டிபோட்ட உன் சட்டை 

படித்து பாதி மடித்த செய்தித்தாள்  


அழகான நம் இல்லம் 

இப்போது அருங்காட்சியகமாய் !!!!!


No comments: