Wednesday, 4 September 2013

வானவில்



வான்வெளியில்

ஹோலிபண்டிகை

வானவில் !

Tuesday, 3 September 2013

நட்சத்திரம்

உனக்காய் காத்திருக்கும்

வேளைகளில்

தூக்கிப்போட்ட

கூழாங்கற்கள் !

பணம்

உயிரற்ற உன்னைத்தேடி

உயிரைக்கொடுத்து

அலைகிறோம்

உயிரற்று போகும்வரை !

Saturday, 31 August 2013

பிறந்தநாள் வாழ்த்து

உயிரை வழித்தெடுத்து

எனக்குருவம் தந்து

மரணத்தின் மதிலைத் தொட்டு

குருதிகொட்டி பிறவி தந்தது நீ !

பிறந்தநாள் வாழ்த்தென்னவொ

எனக்கு மட்டும் !

Thursday, 29 August 2013

முளைத்துவிட்டது காதல்

உள்ளக்கடல் உடைப்பெடுத்து ஓடிவர !

கண்பார்வை கத்தி கொண்டு கிழிக்க !

ஆற்றிலிட்ட கல்லுக்கு  சிதறும்  பறவைகளென

ரத்தமெல்லாம் புதுசத்ததுடன் !

கைகோர்த்து மடிசாய்ந்து சண்டையிட்டு

என்றோ வாழ்ந்த ஞாபகம்

எனக்குள் வந்திட !

கைபேசியில் கதைத்துக்கொண்டே

நீ சிரித்த நம் சந்திப்பின் முதல்கணம் !


முளைத்துவிட்டது காதல் ...!


கலவியற்ற காதல்

அழகழிந்து போன

அறுபதுகளில்

ஊடலிலும் கூடலிலும்

ஓடிச்சென்ற நாட்களை

நினைவுகூர்ந்து

ஊரடங்கினாலும் உரையாடல்

அடங்காமல்

உடல்தாகம் தாண்டிய

உயிர்த்தாகம் உணர்ந்து

என் தோள்களைப்  பற்றிய

அவரது கைகளுடன்

காலம் கடந்ததால்

காகிதத்தில் எழுதாமல்

வரலாற்றில் எழுதிவிட்டு

செல்கிறேன்

கலவியற்ற எங்கள் காதலை..!

Monday, 26 August 2013

இதை தான் காதல் என்று சொல்வார்களோ ?

அப்படி ஒன்றும்

அழகன் இல்லை

எத்தனை முறை

பார்த்தாலும்

சலிக்கவில்லை !

கன்னக்குழியில்

காணாமல்

போனேனோ ?

வண்ணமில்லா  வானவில்

மீசைக்குள் மறைந்து தான்

போனேனோ ?

மனம் மட்டும்

எப்போதும் மயக்க நிலையில் !



மச்சம்

மன்மதன் விட்ட

அம்பின் தடம்

உன் மார்பின்  மச்சம் !


Sunday, 25 August 2013

அழகாய் கலையும்

தலைமுடியும்

அதை கோதிவிடும் 

விரல்களும் 

சாய்த்துவிடும் கண்களும் 

சந்துப்பல் சிரிப்பும் 

மூக்கின்மேல் முத்தமிடும் 

முத்தான மச்சமும் ! 

மார்பின் மத்தியில் 

பூத்திருக்கும் வேர்வைபூக்களும் !  

மோக முனகலும் 

முத்த தீர்த்தமும் !

உன் பிரியம் சொல்ல

பெரிதாய் இல்லை

வார்த்தைகள் !  

வானம் விரித்து 

சூரியனைத் தொட்டு 

எழுதினாலும் 

போதாதே பக்கங்கள் 

உன்னை பற்றி எழுதிட ! 

பஞ்சுமெத்தையில் படுத்தாலும் 

பக்கம் நீ இல்லையென்றால் 

உறக்கம் கூட இரக்கம் 

காட்டுவதில்லை ! 

காதலுடன் காத்திருக்கிறேன் 

கண்ணாளனே 

உன்  வரவிற்காக ! 




Friday, 23 August 2013

துணை

என்னவன் அருகில்

இல்லாத சமயங்களில்

எப்போதும்

தந்துவிட்டு செல்கிறான்....

எனக்கு துணையாய்

தனிமையை.........!


நான்கடி சென்றதும்

திரும்பி பார்த்து 

சிரிப்பாய் ! 

இதழ்கள் சிரித்து 

இதயத்தில் கசிகிறது 

கண்ணீர் ! 

உன்னை ஊருக்கு 

வழியனுப்பும் போதெல்லாம் ........


Wednesday, 7 August 2013

இருக்கும் போது

வந்திருந்தால்

இறந்திருக்க மாட்டேனடா !

இறுதி ஊர்வலத்திற்கு

வந்த காதலனிடம்

காதலியின்

சடலம் கேட்டது !

அவனுக்கு கேட்கவில்லை ......

Thursday, 1 August 2013

அடைமழை

எத்தனை நாள்

பிரிவோ

நில்லாமல் 

பேசிக்  கொண்டே 

விண்ணும் மண்ணும் ! 


கடுகு


என்னதான் கோபமோ

எண்ணை  மீது !

இடைவிடாமல்

திட்டி தீர்க்கிறது !


பரவசமாய் பரிதவிப்பாய்

நான் நட்டு வைத்த

செடியில்

பூ பூத்தது போல !

புதியதாய் மூக்குத்தி

குத்திக் கொள்ளும்

கன்னிப்பெண் போல !

நீ என்னை கடந்து

செல்கையில்

பரவசமாய் பரிதவிப்பாய்  

Wednesday, 17 July 2013

தனிமை

நம்மை 

நான் நீ 

என்றாக்கிய 

பிரிவு 

தினம் தினம் 

பிரசவிக்கிறது 

தனிமையை !!!

Tuesday, 25 June 2013

உனக்கு பிடித்ததாய்

ஏதும் வாங்க

கடைதெருவிற்குச் சென்றேன் !

சுற்றித்திரிந்து எதுவும் !

வாங்காமல் திரும்பினேன்

என்னை விட உனக்கு

பிடித்ததாய் ஏதுமில்லை என்பதால் !

Saturday, 22 June 2013

குப்பைத்தொட்டிக் குழந்தை

முட்டிக் கொண்ட முத்தத்தில்

எட்டி பார்த்த மழலை நான் !

கட்டிக்கொண்டு இருந்ததால்

கருவில் முளைத்த சிலை நான்!

உன்னை கருவில் உதைத்ததாளோ

என்னை உதறி தள்ளிவிட்டாயோ !

கருவில் என்னை சுமந்த தாயே

கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !

குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !

பார்த்துச் செல்வோரெல்லாம்

பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !

என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !

இப்படியே அலறித் துடித்தால்

இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !

இருள்சூழ்கிறது தாயே

இப்போதே வந்துவிடு !


Wednesday, 19 June 2013

உன்னை காதலிக்கும் வரை

 தெரியாது

காதல் எவ்வளவு

அற்புதமானதென்று !!!

உன் அருகாமை இருக்கும்வரை

தெரியாது

தனிமை எவ்வளவு

கொடுமையானதென்று !!!!!

Monday, 17 June 2013

வேகமாய் பெய்த

மழைத்துளிகளை

தாங்காமல் வளைந்து

நிற்கும் இலை போல !

காலையில் கலைந்த  தலையுடன்

சமையலறை வந்து

நின்ற கணவனை

குக்கர் விசில்

கவனம் கலைத்தும்

ரசிப்பதை நிறுத்த முடியவில்லை !!!!

Sunday, 16 June 2013

ஹைக்கூ

காற்றே உனக்கு 


ஈரச்சேலை 

கட்டிவிட்டது

 யாரோ ? 

நீ இல்லாத நான்

உன் இல்லாள்

 நீ இல்லாமல் தனியாள் !


பெரு நகரத்தில் வசிக்கிறேன்

 நீ இல்லாமல்

பெரும் நரகத்தில் வசிக்கிறேன் !


குழந்தைபோல் எழுந்தவுடன் 

வருவாய் என்னை தேடி 

உறங்கும்போது முத்தமிடுவாய் 

தாயாய்        மாறி 


ஒரு நாளும் சண்டையுடன்

உறங்கியதில்லை  

இப்போதெல்லாம்

ஒருநாள்கூட உன் சட்டை 

இல்லாமல் உறங்குவதில்லை 


கிரிக்கெட்டை ஒளிக்கவிட்டு

சமைக்கிறேன் உள்ளிருந்து 

நிலாச்சோற்றை நம்பும் பிள்ளைபோல்

 நீ இருக்கிறாய் என்று !


விஜயம் செய்ய முடியாததால் 

வீடியோவில் வருகிறாயா? 

உன்னை காணமுடிகிறதேன்று

தொழில்நுட்பத்தை போற்றுவதா ? 

அயல்நாடு அனுப்பிய 

தொழில்நுட்பத்தை சாடுவதா ? 


 கடிகாரம்கூட சுற்றுகிறது 

இறுகிய நிலையில்

 கனவுகளோடும் கணினியோடும் 

கரைகிறது என் நாட்கள் ! 


விட்டுச் சென்ற உன் வாசனை திரவியம் 

அதுவும் தரவில்லை உன் வாசம் ! 


கழட்டிபோட்ட உன் சட்டை 

படித்து பாதி மடித்த செய்தித்தாள்  


அழகான நம் இல்லம் 

இப்போது அருங்காட்சியகமாய் !!!!!


Saturday, 15 June 2013

உன் கோப தருணங்களில் !





தூக்கி எறியப்பட்ட  
பூனைக்குட்டியாய் 
நான் ! 

தூக்கிபோட்ட
குழந்தையாய்   
 நீ ! 

Monday, 10 June 2013

பிரிவு



அப்படி ஒன்றும் பெரியதல்ல

ஆனாலும்

வலித்தது

உனக்கும் எனக்குமான

இடைவெளி !