Saturday, 22 June 2013

குப்பைத்தொட்டிக் குழந்தை

முட்டிக் கொண்ட முத்தத்தில்

எட்டி பார்த்த மழலை நான் !

கட்டிக்கொண்டு இருந்ததால்

கருவில் முளைத்த சிலை நான்!

உன்னை கருவில் உதைத்ததாளோ

என்னை உதறி தள்ளிவிட்டாயோ !

கருவில் என்னை சுமந்த தாயே

கருணை இல்லத்திலாவது விட்டிருக்கலாம் !

குப்பைத்தொட்டியில் கொட்டிவிடாயே !

பார்த்துச் செல்வோரெல்லாம்

பாலூட்ட வரவில்லையே ! ஏசிச் செல்கிறார்களே !

என் தாயே உன்னை ! என்ன செய்வேன் !

இப்படியே அலறித் துடித்தால்

இறந்துவிடுவேனம்மா இரண்டு நிமிடத்தில் !

இருள்சூழ்கிறது தாயே

இப்போதே வந்துவிடு !


No comments: