Saturday, 31 August 2013

பிறந்தநாள் வாழ்த்து

உயிரை வழித்தெடுத்து

எனக்குருவம் தந்து

மரணத்தின் மதிலைத் தொட்டு

குருதிகொட்டி பிறவி தந்தது நீ !

பிறந்தநாள் வாழ்த்தென்னவொ

எனக்கு மட்டும் !

Thursday, 29 August 2013

முளைத்துவிட்டது காதல்

உள்ளக்கடல் உடைப்பெடுத்து ஓடிவர !

கண்பார்வை கத்தி கொண்டு கிழிக்க !

ஆற்றிலிட்ட கல்லுக்கு  சிதறும்  பறவைகளென

ரத்தமெல்லாம் புதுசத்ததுடன் !

கைகோர்த்து மடிசாய்ந்து சண்டையிட்டு

என்றோ வாழ்ந்த ஞாபகம்

எனக்குள் வந்திட !

கைபேசியில் கதைத்துக்கொண்டே

நீ சிரித்த நம் சந்திப்பின் முதல்கணம் !


முளைத்துவிட்டது காதல் ...!


கலவியற்ற காதல்

அழகழிந்து போன

அறுபதுகளில்

ஊடலிலும் கூடலிலும்

ஓடிச்சென்ற நாட்களை

நினைவுகூர்ந்து

ஊரடங்கினாலும் உரையாடல்

அடங்காமல்

உடல்தாகம் தாண்டிய

உயிர்த்தாகம் உணர்ந்து

என் தோள்களைப்  பற்றிய

அவரது கைகளுடன்

காலம் கடந்ததால்

காகிதத்தில் எழுதாமல்

வரலாற்றில் எழுதிவிட்டு

செல்கிறேன்

கலவியற்ற எங்கள் காதலை..!

Monday, 26 August 2013

இதை தான் காதல் என்று சொல்வார்களோ ?

அப்படி ஒன்றும்

அழகன் இல்லை

எத்தனை முறை

பார்த்தாலும்

சலிக்கவில்லை !

கன்னக்குழியில்

காணாமல்

போனேனோ ?

வண்ணமில்லா  வானவில்

மீசைக்குள் மறைந்து தான்

போனேனோ ?

மனம் மட்டும்

எப்போதும் மயக்க நிலையில் !



மச்சம்

மன்மதன் விட்ட

அம்பின் தடம்

உன் மார்பின்  மச்சம் !


Sunday, 25 August 2013

அழகாய் கலையும்

தலைமுடியும்

அதை கோதிவிடும் 

விரல்களும் 

சாய்த்துவிடும் கண்களும் 

சந்துப்பல் சிரிப்பும் 

மூக்கின்மேல் முத்தமிடும் 

முத்தான மச்சமும் ! 

மார்பின் மத்தியில் 

பூத்திருக்கும் வேர்வைபூக்களும் !  

மோக முனகலும் 

முத்த தீர்த்தமும் !

உன் பிரியம் சொல்ல

பெரிதாய் இல்லை

வார்த்தைகள் !  

வானம் விரித்து 

சூரியனைத் தொட்டு 

எழுதினாலும் 

போதாதே பக்கங்கள் 

உன்னை பற்றி எழுதிட ! 

பஞ்சுமெத்தையில் படுத்தாலும் 

பக்கம் நீ இல்லையென்றால் 

உறக்கம் கூட இரக்கம் 

காட்டுவதில்லை ! 

காதலுடன் காத்திருக்கிறேன் 

கண்ணாளனே 

உன்  வரவிற்காக ! 




Friday, 23 August 2013

துணை

என்னவன் அருகில்

இல்லாத சமயங்களில்

எப்போதும்

தந்துவிட்டு செல்கிறான்....

எனக்கு துணையாய்

தனிமையை.........!


நான்கடி சென்றதும்

திரும்பி பார்த்து 

சிரிப்பாய் ! 

இதழ்கள் சிரித்து 

இதயத்தில் கசிகிறது 

கண்ணீர் ! 

உன்னை ஊருக்கு 

வழியனுப்பும் போதெல்லாம் ........


Wednesday, 7 August 2013

இருக்கும் போது

வந்திருந்தால்

இறந்திருக்க மாட்டேனடா !

இறுதி ஊர்வலத்திற்கு

வந்த காதலனிடம்

காதலியின்

சடலம் கேட்டது !

அவனுக்கு கேட்கவில்லை ......

Thursday, 1 August 2013

அடைமழை

எத்தனை நாள்

பிரிவோ

நில்லாமல் 

பேசிக்  கொண்டே 

விண்ணும் மண்ணும் ! 


கடுகு


என்னதான் கோபமோ

எண்ணை  மீது !

இடைவிடாமல்

திட்டி தீர்க்கிறது !


பரவசமாய் பரிதவிப்பாய்

நான் நட்டு வைத்த

செடியில்

பூ பூத்தது போல !

புதியதாய் மூக்குத்தி

குத்திக் கொள்ளும்

கன்னிப்பெண் போல !

நீ என்னை கடந்து

செல்கையில்

பரவசமாய் பரிதவிப்பாய்