அழகாய் கலையும்
தலைமுடியும்
அதை கோதிவிடும்
விரல்களும்
சாய்த்துவிடும் கண்களும்
சந்துப்பல் சிரிப்பும்
மூக்கின்மேல் முத்தமிடும்
முத்தான மச்சமும் !
மார்பின் மத்தியில்
பூத்திருக்கும் வேர்வைபூக்களும் !
மோக முனகலும்
முத்த தீர்த்தமும் !
உன் பிரியம் சொல்ல
பெரிதாய் இல்லை
வார்த்தைகள் !
உன் பிரியம் சொல்ல
பெரிதாய் இல்லை
வார்த்தைகள் !
வானம் விரித்து
சூரியனைத் தொட்டு
எழுதினாலும்
போதாதே பக்கங்கள்
உன்னை பற்றி எழுதிட !
பஞ்சுமெத்தையில் படுத்தாலும்
பக்கம் நீ இல்லையென்றால்
உறக்கம் கூட இரக்கம்
காட்டுவதில்லை !
காதலுடன் காத்திருக்கிறேன்
கண்ணாளனே
உன் வரவிற்காக !