Thursday, 29 August 2013

முளைத்துவிட்டது காதல்

உள்ளக்கடல் உடைப்பெடுத்து ஓடிவர !

கண்பார்வை கத்தி கொண்டு கிழிக்க !

ஆற்றிலிட்ட கல்லுக்கு  சிதறும்  பறவைகளென

ரத்தமெல்லாம் புதுசத்ததுடன் !

கைகோர்த்து மடிசாய்ந்து சண்டையிட்டு

என்றோ வாழ்ந்த ஞாபகம்

எனக்குள் வந்திட !

கைபேசியில் கதைத்துக்கொண்டே

நீ சிரித்த நம் சந்திப்பின் முதல்கணம் !


முளைத்துவிட்டது காதல் ...!