கலவியற்ற காதல்
அழகழிந்து போன
அறுபதுகளில்
ஊடலிலும் கூடலிலும்
ஓடிச்சென்ற நாட்களை
நினைவுகூர்ந்து
ஊரடங்கினாலும் உரையாடல்
அடங்காமல்
உடல்தாகம் தாண்டிய
உயிர்த்தாகம் உணர்ந்து
என் தோள்களைப் பற்றிய
அவரது கைகளுடன்
காலம் கடந்ததால்
காகிதத்தில் எழுதாமல்
வரலாற்றில் எழுதிவிட்டு
செல்கிறேன்
கலவியற்ற எங்கள் காதலை..!